
10ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா
ஜூன் 21, 2022
Advertisement
நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளார். கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதையடுத்து தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று இருக்கிறார். இப்படி தங்கள் மகள் தியா அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதால் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவி பெற்று கல்வி பயின்ற மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகப்படியான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்களாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!