
சூர்யா 40 படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது : வாடிவாசல் அப்டேட்டும் வெளியீடு
ஜூலை 15, 2021
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரைக்குடி, மதுரையில் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!