
ரஜினி முடிவுக்கு உள்ளாட்சி தேர்தல் தான் காரணமா?
இதற்கான பின்னணி காரணம் குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது : மக்கள் மன்றமாக இருக்கும் வரை அரசியல் குறித்த சந்தேகம் நீடித்துக் கொண்டே இருக்கும். நம் நிர்வாகிகள் பிற கட்சிகளில் சேரும்போது ரஜினி மன்றத்தில் இருந்து வந்ததாக சொல்வார்கள். உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரை பயன்படுத்தி சிலர் களம் இறங்க வாய்ப்பு உண்டு. கட்சி தொடங்குவதற்காக ஆயிரக்கணக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கி இருக்கிறோம். அவர்களை விடுவித்து சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனது ரசிகர் மன்றத்தில் அரசியல் சார்பு இன்றி மக்கள் பணியாற்ற விரும்புபவர்கள் மட்டும் என்னுடன் இருக்கலாம் என்றார். நாங்கள் உருக்கத்துடன் உங்களுடன் தான் இருப்போம் என்று ஒருமித்த குரலில் சொன்னோம் என்றனர்
ரஜினி மன்ற வாட்ஸ் அப் குரூப்கள் கலைப்பு
இதனிடையே அரசியல் கட்சிக்கான கட்டமைப்பு பணிகள் நடந்தபோதே மக்கள் மன்றம் தனியாகவும், ரசிகர் மன்றம் தனியாகவும் தான் இயங்கி வந்தன. இரண்டுக்கும் தனித்தனி நிர்வாகிகள், தனித்தனி வாட்சப் குரூப்கள் இருக்கின்றன. கடந்த வார அறிவிப்புக்கு பின்னர் மக்கள் மன்ற வாட்சப் குரூப்களில் இருந்து நிர்வாகிகள் விலக தொடங்கி விட்டனர். 80 சதவீத வாட்சப் குரூப்கள் கலைக்கப்பட்டு விட்டன. ரசிகர் மன்ற வாட்சப் குரூப்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!