
மாணவர்களின் எதிர்ப்பு : மவுனம் கலைத்த மாதவன்
அங்கே படிக்கும் மாணவர்கள் மாதவனின் அலுவலக கதவில் காணவில்லை என்றும், நீட் விற்பனைக்கு உள்ளது என்பது போன்றும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி மாதவனின் அமைதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மவுனம் கலைத்த மாதவன் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளில் தானும் பங்கேற்பதாகவும் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் மீது அரசு உடனடியாகவும் உறுதியாகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தற்காலிக தோல்விகளால் வேதனை அடைய வேண்டாம், தங்களின் திறமை மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!