
பெரிதுபடுத்த வேண்டாம் : அஷ்வின் சர்ச்சை பேச்சுக்கு எஸ்ஆர் பிரபு சமரசம்
இந்த விழாவில் பேசும்போது, “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. என்னிடம் கத்தை சொல்லும்போது எனக்கு அது பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன்.. அதுபோல நாற்பது முறை தூங்கியுள்ளேன். நாற்பத்தி ஒன்னாவது கதையான இதுதான் என்னை ஈர்த்தது என கூறினார். அவரது இந்த பேச்சு உதவி இயக்குனர்கள் மற்றும் சில சீனியர் இயக்குனர்களிடம் கூட கோபத்தை வரவழைத்தது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை, அப்படியே விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். அவர் கூறுகையில், “சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக... அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்” என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!