
சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன்
ஏப் 16, 2026
Advertisement
தமிழில் எங்கேயும் எப்போதும், வலியவன், ராங்கி ஆகிய படங்களை இயக்கியவர் எம்.சரவணன். இவரது இயக்கத்தில் கடைசியாக 2023ம் ஆண்டில் "நாடு" என்கிற படம் வெளியானது. அதன்பிறகு தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சரவணன் இயக்குனராக திரும்புகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதை சரவணன் தான் இயக்குகிறார் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யஜோதி தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பதாக அறிவித்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!