
நடிகரின் கமெண்ட் வேதனைப்படுத்தியது : சம்யுக்தா வருத்தம்
ஆனால் அதே சமயம் வாத்தி பட ரிலீஸ் சமயத்திலேயே மலையாளத்தில் சம்யுக்தா நடித்த பூமராங் என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் மறுத்துவிட்டதாக படக்குழுவினர் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் விருபாக்ஷா படம் மலையாளத்தில் வெளியாவதை முன்னிட்டு கேரளாவில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் சம்யுக்தா.
அப்போது பேசிய அவர், “எனக்கு மேனன் என்கிற சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை என்பதால் தான் அதை நீக்கினேன். ஆனால் அந்த சமயத்தில் என்னுடன் பூமராங் படத்தில் ஜோடியாக நடித்திருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ இதுபற்றி அப்போது கூறும்போது மேனன், நாயர் என எந்த சாதி பெயரை வைத்தாலும் சரி நீக்கினாலும் சரி.. நீங்கள் பார்க்கும் வேலையில் சின்சியராக இருக்க வேண்டும் என கருத்து கூறியது என்னை வேதனைப்படுத்தியது.
நான் மேனன் என்கிற பெயரை நீக்கியதால் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. இப்போதும் கூட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதும் என்னை சம்யுக்தா மேனன் என்று தான் பலரும் அழைக்கின்றனர்” என்று கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் சம்யுக்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!