
மீண்டும் வருகிறார் சமந்தா: ரசிகர்கள் மகிழ்ச்சி
பிப் 06, 2024
Advertisement
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சாகுந்தலம், குஷி படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்து கொள்ள வசதியாக 6 மாதம் பிரேக் அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்ட சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். என்றாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். என்றாலும் அவற்றை கூடுமானவரையில் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார்.
தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் "சிட்டாடல்" என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருகாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் "சிட்டாடல்" என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருகாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!