
மீண்டும் குத்து சண்டைக்கு திரும்புகிறார் ரித்திகா சிங்?
ஜூன் 03, 2021
Advertisement
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு தமிழ் மற்றும் இந்தியில் உருவான படம் இறுதிசுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிசுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை கட்டிவைத்து விட்டு முழு நேர நடிகை ஆனார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிசுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
இதன்பிறகு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்விகா சிங் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள அவர். "ஒரு பயிற்சியாளர் சொல்லித் தருவதை அப்படியே செய்வது கடினம், அடிக்கடி தவறி விழுகிறேன். முச்சு திணறுகிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிசுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
இதன்பிறகு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்விகா சிங் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள அவர். "ஒரு பயிற்சியாளர் சொல்லித் தருவதை அப்படியே செய்வது கடினம், அடிக்கடி தவறி விழுகிறேன். முச்சு திணறுகிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!