
விஜய், பாலகிருஷ்ணா உடன் மோதும் ரவி தேஜா
உண்மை சம்பவத்தை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் முதல் பான் இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்த நிலையில் இந்த படம் தள்ளி போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் நேற்று படக்குழுவினர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, " எந்த வித அடிப்படை காரணங்கள் இல்லாமல் சிலர் " டைகர் நாகேஸ்வரா ராவ்" படம் தள்ளி போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஏனெனில், எங்கள் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எங்கள் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளனர். மேலும், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான் விஜய் நடிக்கும் லியோ, பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!