
மீண்டும் ‛ஒரு கைதியின் டைரி : போஸ்டரை வெளியிட்ட ரஜினி
இப்போது இதே தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இதை சுசீந்திரன் இயக்க முதன்மை வேடத்தில் சாந்தனு, சீமான் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்க, கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா - மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக் ஷன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா - மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
இது கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!