
சொன்ன சொல்லை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்
மார் 22, 2024
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இப்போது அதை நிறைவேற்றி உள்ளார்.
படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சி இருந்தது. இதில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் கேட்டோம். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து தந்தார். இதற்காக அவர் சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டார். 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். லாரன்ஸால் படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது"" என தெரிவித்துள்ளார்.
படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சி இருந்தது. இதில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் கேட்டோம். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து தந்தார். இதற்காக அவர் சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டார். 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். லாரன்ஸால் படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது"" என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!