
ஈகையில் சட்ட மாணவி சந்திக்கும் பிரச்னைகள்
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: சாதிக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் போராட்டம்தான் படத்தின் கதை. நயன்தாராவிற்கு "அறம்" படம் அமைந்தது போல அஞ்சலிக்கு இந்த படம் அமையும். மும்பையில் இருந்து சட்டம் படிக்க சென்னை வரும் அவருக்கு இங்கு ஒரு பிரச்னை அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புரட்சி பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியின் கதை இது.
நாம் கடந்து செல்லும் எளிய மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய வாழ்க்கை புதைந்திருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையையும் இந்தக் கதை பேசும். அதைப் போல சிலர் நூறு வருஷம் வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றமோ, முன்னேற்றமோ நிகழ்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்கிற படமாகவும் இருக்கும். என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!