
படப்பிடிப்பிலிருந்து பவன் கல்யாண் செல்பி
டிச 03, 2024
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு பவன் கல்யாணும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது "ஹரிஹர வீர மல்லு" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது "ஹரிஹர வீர மல்லு" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!