
வடிவேலு படத்துக்கு புதிய பெயர்கள் பரிசீலனை
செப் 14, 2021
Advertisement
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
அதையடுத்து வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளத்து. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும் வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லையாம். எனவே மீண்டும் நாய் சேகர், வடிவேலுவின் நாய் சேகர் போன்ற தலைப்புகளை வடிவேலு படக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அதையடுத்து வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளத்து. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும் வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லையாம். எனவே மீண்டும் நாய் சேகர், வடிவேலுவின் நாய் சேகர் போன்ற தலைப்புகளை வடிவேலு படக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!