
தெலுங்கில் கவனம் செலுத்தும் கீர்த்திஷெட்டி, நயன்தாரா
ஏப் 29, 2026
Advertisement
தமிழில் கீர்த்தி ஷெட்டி நடித்த "வா வாத்தியார், எல்ஐகே" படங்கள் வணிக ரீதியாக ஹிட்டாகவில்லை. ரவி மோகன் ஜோடியாக அவர் நடித்த "ஜீனி" படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. இந்நிலையில் தமிழில் நேரம் சரியில்லாததால் தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறாராம். தெலுங்கில் சில வெற்றிகளை கொடுத்துவிட்டு மீண்டும் தமிழில் கவனம் செலுத்தலாம் என யோசிக்கிறாராம்.
இதேபோல் நயன்தாராவும் தமிழல் வெற்றிகள் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் நடித்த படங்களும் இப்போதைக்கு ரிலீஸ் ஆகிற மாதிரி தெரியவில்லை. இங்கே உள்ள ஹீரோக்களும் அவரை புறக்கணிப்பதால் தெலுங்கு, இந்தியில் நடிக்கலாம் என முடிவு செய்து இருக்கிறாராம். இப்போது இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தவிர, படம் தயாரிப்பது, வெளியிடுவதையும் கொஞ்சம் காலம் நிறுத்தலாம் என யோசிக்கிறாராம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!