
மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார்
அக் 04, 2024
Advertisement
பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "மெய்யழகன்". அப்படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது. ஆனால், படத்தைப் பார்த்த பலரும் படத்தின் நீளம் அதிகம் என்றும், தேவையற்ற சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், இயக்குனர் பிரேம்குமார் அப்படி காட்சிகளைக் குறைக்க சம்மதிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திலிருந்து 18 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு அதற்குரிய காரணத்தையும் கூறியிருந்தார் பிரேம்குமார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தக் காட்சிகளைத் தூக்கியது குறித்துப் பேசியுள்ளார். “சூர்யா, கார்த்தி ஆகியோர் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என்று சொன்னார்கள். நம்ம புள்ளையையே மூக்கு சரியில்லை, காது சரியில்லன்னு சொல்லலாமா, என்ன எடுத்தோமோ அது அப்படியே போகட்டும்னு சொன்னாங்க. சூர்யா கிட்ட சொன்ன போது கொந்தளிக்கிறாரு. எதுக்கு அப்படியே இருக்கட்டும் எல்லாரும் ரசிக்கிறாங்க, நல்லா இருக்கிற விஷயத்தை ஏன் குறைக்கனும்னு கேட்டாரு.
ரசிக்கிறதும் ஒரு சதவீதம், ரசிக்காதவங்களும் இருக்காங்க. அவங்களையும் கணக்குல எடுத்துக்கணும். இந்த இரண்டும் சேர்ந்ததுதானே ரசிகர்கள். பிடிச்சவங்கதான் ஆடியன்ஸ், பிடிக்காதவங்க எப்படியோ போங்கன்னு சொல்ல முடியாது. மனசை கல்லாக்கிட்டுதான் அதை தூக்க வேண்டி இருந்தது. என்னைத் தவிர வேற யாருக்கும் அதுல உடன்பாடு இல்ல. சூர்யா அண்ணன் கோவிச்சிக்கல, அவருக்கு காட்சிகளை நீக்கினதுல உடன்பாடு இல்ல,” என்று விளக்கமளித்துள்ளார்.
ஆனால், இயக்குனர் பிரேம்குமார் அப்படி காட்சிகளைக் குறைக்க சம்மதிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திலிருந்து 18 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு அதற்குரிய காரணத்தையும் கூறியிருந்தார் பிரேம்குமார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தக் காட்சிகளைத் தூக்கியது குறித்துப் பேசியுள்ளார். “சூர்யா, கார்த்தி ஆகியோர் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என்று சொன்னார்கள். நம்ம புள்ளையையே மூக்கு சரியில்லை, காது சரியில்லன்னு சொல்லலாமா, என்ன எடுத்தோமோ அது அப்படியே போகட்டும்னு சொன்னாங்க. சூர்யா கிட்ட சொன்ன போது கொந்தளிக்கிறாரு. எதுக்கு அப்படியே இருக்கட்டும் எல்லாரும் ரசிக்கிறாங்க, நல்லா இருக்கிற விஷயத்தை ஏன் குறைக்கனும்னு கேட்டாரு.
ரசிக்கிறதும் ஒரு சதவீதம், ரசிக்காதவங்களும் இருக்காங்க. அவங்களையும் கணக்குல எடுத்துக்கணும். இந்த இரண்டும் சேர்ந்ததுதானே ரசிகர்கள். பிடிச்சவங்கதான் ஆடியன்ஸ், பிடிக்காதவங்க எப்படியோ போங்கன்னு சொல்ல முடியாது. மனசை கல்லாக்கிட்டுதான் அதை தூக்க வேண்டி இருந்தது. என்னைத் தவிர வேற யாருக்கும் அதுல உடன்பாடு இல்ல. சூர்யா அண்ணன் கோவிச்சிக்கல, அவருக்கு காட்சிகளை நீக்கினதுல உடன்பாடு இல்ல,” என்று விளக்கமளித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!