
விஜய் இப்படி செய்வார் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை! - இயக்குனர் மாரி செல்வராஜ்
ஆக 11, 2024
Advertisement
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் வாழை படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ், விஜய் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ரசிகர் மன்றங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். தமிழகம் முழுக்க அவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இப்படி அவர் ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!