
நலமாக இருக்கிறேன் : பிரேமலு நடிகர் வெளியிட்ட தகவல்
ஜூலை 30, 2024
Advertisement
மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்திருந்த சங்கீத் பிரதாப் மற்றும் ரோமாஞ்சம் என்கிற ஹாரர் காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த அர்ஜூன் அசோகன் ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கொச்சியில் உள்ள எம்ஜி ரோடு என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கார் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது..
இதில் எதிர்பாராத விதமாக இந்த நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் சங்கீத் பிரதாப் தற்போது தான் நலமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பதிவு மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் முந்தைய நாள் இரவு விபத்தை சந்தித்தாலும் நல்ல வேலையாக அனைவருமே தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் 24 மணி நேரம் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் இது குறித்து தகவலை வெளியே யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனக்கு சிறிய காயம் தான்.. ஆனால் தற்போது நலமாக இருக்கிறேன். இன்று வீடு திரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன். மேலும் கார் ஓட்டுநர் மீது நான் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக இந்த நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் சங்கீத் பிரதாப் தற்போது தான் நலமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பதிவு மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் முந்தைய நாள் இரவு விபத்தை சந்தித்தாலும் நல்ல வேலையாக அனைவருமே தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் 24 மணி நேரம் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் இது குறித்து தகவலை வெளியே யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனக்கு சிறிய காயம் தான்.. ஆனால் தற்போது நலமாக இருக்கிறேன். இன்று வீடு திரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன். மேலும் கார் ஓட்டுநர் மீது நான் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!