
ஹவுஸ் ஆப் டிராகன் புதிய தொடர் ஆகஸ்ட் 11ல் வெளியாகிறது
ஏப் 01, 2022
Advertisement
உலக புகழ்பெற்ற சின்னத்திரை தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ சேனலில் 7 சீசன்களாக வெளியான இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டனர். சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த தொடரின் கடைசி சீசன் மதர் ஆப் டிராகன் கொல்லப்படுவதோடு முடிந்தது.
அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதனை ஹவுஸ் ஆப் டிராகன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள். இதில் முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எச்பிஆ சேனலில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதனை ஹவுஸ் ஆப் டிராகன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள். இதில் முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எச்பிஆ சேனலில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!