
ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி
ஏப் 07, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய மசாலா இயக்குனர்களில் ஒருவர் ஹரி. அவர் "கேமரா" இல்லாமல் கூட சினிமா எடுப்பார், ஆனால், "அருவா" இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்ற பெயரைப் பெற்றவர்.
பிரசாந்த், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த "தமிழ்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2002ல் வெளிவந்த தனது முதல் படத்திலேயே நாயகனை "அருவா" தூக்கச் செய்தவர் ஹரி. அப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்தது.
தொடர்ந்து விக்ரம், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால், தனுஷ், அருண் விஜய், பரத் ஆகிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். அவர்களில் விக்ரம், சூர்யா, விஷால் ஆகியோருடன் மட்டுமே மீண்டும் இணைந்து படங்களை இயக்கியுள்ளார்.
"சாமி, ஐயா, சிங்கம்" ஆகிய படங்கள் ஹரியின் இயக்கத்தில் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஹரி இயக்கி விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "ரத்னம்" படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 23 வருடங்களுக்குப் பிறகு தனது முதல் பட நாயகனாக பிரசாந்த் உடன் மீண்டும் இணைந்துள்ளார் ஹரி. பிரசாந்தின் 55வது படமாக உருவாக உள்ள அப்படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள்.
தமிழ் சினிமாவில் 90, 2000 கால கட்டங்களில் அறிமுகமான இயக்குனர்களில் சுந்தர் சி, ஹரி உள்ளிட்ட ஒரு சிலரே தொடர்ந்து இத்தனை வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்கள். மற்றவர்களின் பயணங்கள் தோல்விகளால் தடைபட்டுவிட்டன.
பிரசாந்த், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த "தமிழ்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2002ல் வெளிவந்த தனது முதல் படத்திலேயே நாயகனை "அருவா" தூக்கச் செய்தவர் ஹரி. அப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்தது.
தொடர்ந்து விக்ரம், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால், தனுஷ், அருண் விஜய், பரத் ஆகிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். அவர்களில் விக்ரம், சூர்யா, விஷால் ஆகியோருடன் மட்டுமே மீண்டும் இணைந்து படங்களை இயக்கியுள்ளார்.
"சாமி, ஐயா, சிங்கம்" ஆகிய படங்கள் ஹரியின் இயக்கத்தில் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஹரி இயக்கி விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "ரத்னம்" படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 23 வருடங்களுக்குப் பிறகு தனது முதல் பட நாயகனாக பிரசாந்த் உடன் மீண்டும் இணைந்துள்ளார் ஹரி. பிரசாந்தின் 55வது படமாக உருவாக உள்ள அப்படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள்.
தமிழ் சினிமாவில் 90, 2000 கால கட்டங்களில் அறிமுகமான இயக்குனர்களில் சுந்தர் சி, ஹரி உள்ளிட்ட ஒரு சிலரே தொடர்ந்து இத்தனை வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்கள். மற்றவர்களின் பயணங்கள் தோல்விகளால் தடைபட்டுவிட்டன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!