
மீண்டும் இணைந்த கருடன் கூட்டணி
இதுகுறித்து தயாரிப்பாளர் கே.குமார் கூறும்போது “கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற "கருடன்" படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் சூரி நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கிறது.
"விலங்கு" எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!