
பிளாஷ்பேக் : டுவின்சாக நடித்த சாவித்ரி
ஒரு ஏழை தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வறுமையின் காரணமாக பிரிகிறார்கள். அதாவது ஒரு மகளை தாய் வளர்த்துக்கொள்ள இன்னொரு மகளை ஒரு பணக்காரர் ஒருவருக்கு தத்து கொடுத்து விடுகிறார். தாய் இறக்கும் தருவாயில் மகளிடம் இரட்டை சகோதரிகள் பற்றிய ரகசியத்தை சொல்கிறார். மகளும் பணக்காரரிடம் வளரும் தன் சகோதரியை தேடிச் செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் சாவித்ரியின் நடிப்பிற்காக பேசப்பட்டது. நல்ல வரவேற்பையும் பெற்றது.
"காற்று வந்தால் தலைசாயும் நாணல்" , "கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா" "ஓடம் நதியினிலே", "துள்ளித் திரிந்த பெண்ணொன்று" , "வா என்றது உருவம்" , "வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா" போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம் இது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!