
பிளாஷ்பேக் : கே.பாக்யராஜை கொலைகாரனாக ஏற்காத ரசிகைகள்
ஜன 20, 2025
Advertisement
கே.பாக்யராஜின் படங்களுக்கு அவரது கடைசி படம் வரைக்கும் பெண்கள்தான் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள். அவரது படங்களை வெற்றிப் படமாக்கியதும் அவர்கள்தான். பாக்யராஜ் வேகமாக வளர்ந்து வந்த காலத்தில் தனது பாணியில் இருந்து மாறி அவர் இயக்கிய படம் "விடியும் வரை காத்திரு". "கன்னிப் பருவத்திலே" படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவர் கொலைகார வில்லனாக நடித்தார்.
ஒரு பணக்கார வீட்டுக்குள் பாசக்காரன்போன்று வேஷம் போட்டு சென்று அந்த சொத்துகளை பறிக்க அவர் செய்யும் தந்திரங்களும், கொலைகளும்தான் படம். இந்த படத்திற்கு முன்புதான் "மவுன கீதங்கள்" வெளிவந்திருந்தது. அதில் நேர்மையான ஒரு ஆண் மகனாக நடித்து பெண்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் நடித்ததை அவர்கள் ஏற்கவில்லை. படத்தில் அவர் நடிப்பும் பாராட்டும்படி இல்லை.
இதனால் இந்த படம் வழக்கமான வெற்றியை பெறவில்லை. என்றாலும் திரைக்கதை, பின்னணி இசை, வசனம் இவற்றுக்காக படம் ஓரளவுக்கு ஓடியது. ஆண் ரசிகர்கள் படத்தை ரசித்தார்கள். சத்யகலா நாயகியாகவும், கராத்தே மணி போலீஸ் அதிகாரியாகவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
ஒரு பணக்கார வீட்டுக்குள் பாசக்காரன்போன்று வேஷம் போட்டு சென்று அந்த சொத்துகளை பறிக்க அவர் செய்யும் தந்திரங்களும், கொலைகளும்தான் படம். இந்த படத்திற்கு முன்புதான் "மவுன கீதங்கள்" வெளிவந்திருந்தது. அதில் நேர்மையான ஒரு ஆண் மகனாக நடித்து பெண்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் நடித்ததை அவர்கள் ஏற்கவில்லை. படத்தில் அவர் நடிப்பும் பாராட்டும்படி இல்லை.
இதனால் இந்த படம் வழக்கமான வெற்றியை பெறவில்லை. என்றாலும் திரைக்கதை, பின்னணி இசை, வசனம் இவற்றுக்காக படம் ஓரளவுக்கு ஓடியது. ஆண் ரசிகர்கள் படத்தை ரசித்தார்கள். சத்யகலா நாயகியாகவும், கராத்தே மணி போலீஸ் அதிகாரியாகவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!