
முன்பதிவில் உஷார் ஆன ரசிகர்கள்
ஆனால், சமீபத்திய பெரிய படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஏமாற்றியதால் ரசிகர்களும் தற்போது "உஷார்" ஆகிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாளை ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ள "தங்கலான், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா" ஆகிய படங்களின் முன்பதிவுகளைப் பார்க்கும் போது அது உங்களுக்கும் புரியும். நாளை ஒரு நாளில் மட்டும் "தங்கலான், டிமான்ட்டி காலனி 2" ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் நடந்துள்ளது. அதற்கடுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மிக மிகக் குறைந்த அளவிலான முன்பதிவுகளே நடந்துள்ளன.
நாளை இப்படங்கள் வெளியான பின் படம் எப்படியிருக்கிறது என்ற கருத்துக்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம் என ரசிகர்கள் தயங்குவது தெரிகிறது. படம் நன்றாக இருந்தால் தியேட்டர்கள் பக்கம் போவோம், இல்லை என்று வந்தால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!