
புலனாய்வு பத்திரிகையாளர்களாக மாறும் தனுஷ் மாளவிகா மோகனன்
பிப் 12, 2021
Advertisement
ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷும் மாளவிகா மோகனனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!