
கொரோனா சித்தா டாக்டர், ஹீரோ ஆனார்
ஜூலை 16, 2021
Advertisement
கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் கே.வீரபாபு அழைக்கப்பட்டு, அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, மரணமின்றி குணப்படுத்தப்பட்டது. மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து வந்தார்.
தற்போது இவர் முடக்கருத்தான் எனும் புதிய படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைக்கிறார். பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிற்பி - பழனி பாரதி கூட்டணி அமைக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .
தற்போது இவர் முடக்கருத்தான் எனும் புதிய படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைக்கிறார். பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிற்பி - பழனி பாரதி கூட்டணி அமைக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!