
விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை
ஏப் 23, 2025
Advertisement
யு டியுப், இணைய, சமூக வலைத்தளங்கள் மிக அதிகமாகப் பரவிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு படம் வெளிவந்த உடனேயே அதற்கான விமர்சனங்களும் வந்துவிடுகின்றன. சிலரோ இடைவேளை வரையில் கூட தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுத்தும், சிலர் அதுவரையிலும் கூட பார்த்த படத்தை விமர்சனமாக எழுதுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியான விமர்சனங்களைத் தடுக்க வேண்டுமென அனைத்துத் திரையுலகத்திலும் அவ்வப்போது குரல் எழும்பும், பின்னர் அது காணாமல் போய்விடும்.
தெலுங்குத் திரையுலகத்தின் திறமையான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட நானி, விமர்சனங்கள் பற்றிய தனது கருத்து, ஆலோசனையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“முன்பெல்லாம் உடனுக்குடன் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த ஒரு தளமும் இல்லை. ஆனால், இப்போது சோஷியல் மீடியா வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் தடுக்க முடியுமா? ஏன் தடுக்க வேண்டும் ?.
ஒரு புதிய படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்று சொல்லும் வரை ஓகே தான். அதேசமயம் ஒரு படத்தின் முதல் காலை காட்சி முடிந்ததுமே படம் "பிளாப்" என்று விமர்சகர்கள் அறிவிக்கக் கூடாது. ஒரு பத்து நாட்கள் கழித்து படம் "பிளாப்" என்றால் அது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
நானி நடித்துள்ள "ஹிட் 3" படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் விமர்சகர்களின் வரவேற்பை எப்போதும் பெறுவது வழக்கம். படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தால் கூட அவரது படத்தில் ஏதோ ஒன்று இருக்கும் என்று பாராட்டுக்களைப் பெறுபவர்.
தற்போதைய விமர்சனங்கள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் செய்யும் போட்டி, பொறாமையால் மட்டுமே வருகிறது என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக உள்ளது. அதை சம்பந்தப்பட்ட நடிகர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது நடக்காத ஒன்று.
இப்படியான விமர்சனங்களைத் தடுக்க வேண்டுமென அனைத்துத் திரையுலகத்திலும் அவ்வப்போது குரல் எழும்பும், பின்னர் அது காணாமல் போய்விடும்.
தெலுங்குத் திரையுலகத்தின் திறமையான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட நானி, விமர்சனங்கள் பற்றிய தனது கருத்து, ஆலோசனையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“முன்பெல்லாம் உடனுக்குடன் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த ஒரு தளமும் இல்லை. ஆனால், இப்போது சோஷியல் மீடியா வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் தடுக்க முடியுமா? ஏன் தடுக்க வேண்டும் ?.
ஒரு புதிய படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்று சொல்லும் வரை ஓகே தான். அதேசமயம் ஒரு படத்தின் முதல் காலை காட்சி முடிந்ததுமே படம் "பிளாப்" என்று விமர்சகர்கள் அறிவிக்கக் கூடாது. ஒரு பத்து நாட்கள் கழித்து படம் "பிளாப்" என்றால் அது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
நானி நடித்துள்ள "ஹிட் 3" படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் விமர்சகர்களின் வரவேற்பை எப்போதும் பெறுவது வழக்கம். படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தால் கூட அவரது படத்தில் ஏதோ ஒன்று இருக்கும் என்று பாராட்டுக்களைப் பெறுபவர்.
தற்போதைய விமர்சனங்கள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் செய்யும் போட்டி, பொறாமையால் மட்டுமே வருகிறது என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக உள்ளது. அதை சம்பந்தப்பட்ட நடிகர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது நடக்காத ஒன்று.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!