
டைட்டில் இல்லாமலேயே முடிந்தது அருண் விஜய் படம்
ஜன 12, 2021
Advertisement
ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கிய குற்றம் 23 படம் அருண்விஜய்க்கு திருப்பம் தந்த படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் 31வது படத்தை இயக்கி முடித்துள்ளார் அறிவழகன்.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் 2018ல் மிஸ் இண்டியா பட்டம் பெற்ற ஸ்டெபி படேல் தமிழுக்கு வருகிறார். முன்னதாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படமும் குற்றம் 23 போன்றே க்ரைம் த்ரில்லர் படம். அது மெடிக்கல் த்ரில்லர். இது எந்த மாதிரியான த்ரில்லர் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் 2018ல் மிஸ் இண்டியா பட்டம் பெற்ற ஸ்டெபி படேல் தமிழுக்கு வருகிறார். முன்னதாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படமும் குற்றம் 23 போன்றே க்ரைம் த்ரில்லர் படம். அது மெடிக்கல் த்ரில்லர். இது எந்த மாதிரியான த்ரில்லர் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!