
குட்டி ராதிகாவா யார் அது? - முன்னாள் முதல்வர் குமாரசாமி கோபம்
தற்போது குட்டி ராதிகா ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். பெங்களூரில் பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு 1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனை குட்டி ராதிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஜோதிடர் தயாரிக்கும் படத்திற்கு சம்பளமாகத்தான் அந்த பணத்தை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் குட்டி ராதிகாவிடம விசாரணை நடத்தினார்கள். முன்னாள் முதல்வரின் மனைவி மோசடி வழக்கில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த குமாரசாமி "நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று கோபத்தோடு கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!