
அரண்மனை 3 டிரைலருக்கு வரவேற்பு : பேயாக மிரட்டும் ஆர்யா
அக் 01, 2021
Advertisement
அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றி பெற்ற சுந்தர்.சி தற்போது அதன் மூன்றாம் பாகத்தை ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகிபாபு ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதோடு ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14-ந் தேதி அன்று அரண்மனை-3 திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சுந்தர்.சி படங்களில் பெண்களே பேயாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவும் பேயாக நடித்துள்ளார். இதனால் இந்த டிரைலர் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஷி கண்ணா கவர்ச்சிகரமாக தோன்றுகிறார்கள். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!