
கடப்பா தர்கா சந்தனகூடு: ஏ.ஆர்.ரகுமான் பிரார்த்தனை
டிச 20, 2021
Advertisement
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரபல அமீன் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் சந்தனகூடு விழாவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று அதிகாலை அமீன் பீர் பெரிய தர்காவுக்கு சந்தனக்கூடு கொண்டு வந்து, தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி அரிபுலா ஹுசைன் செய்திருந்தார். ரகுமான் வருகிற தகவலை தர்கா நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர் சதாரண பக்தர் போன்று வந்து பிரார்த்தனை செய்து விட்டு திரும்பினார். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ரகுமான் இந்த தர்காவுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று அதிகாலை அமீன் பீர் பெரிய தர்காவுக்கு சந்தனக்கூடு கொண்டு வந்து, தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி அரிபுலா ஹுசைன் செய்திருந்தார். ரகுமான் வருகிற தகவலை தர்கா நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர் சதாரண பக்தர் போன்று வந்து பிரார்த்தனை செய்து விட்டு திரும்பினார். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ரகுமான் இந்த தர்காவுக்கு வந்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!