
செருப்பால் அடிப்பேன் - புஷ்பா பட நடிகை கோபம்
பிப் 18, 2023
Advertisement
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். சின்னத்திரையில் இருந்து வந்த இவர் இப்போது தெலுங்கில் பல படங்களில் நடிக்கிறார். பல தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொடருகிறார். சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தனர். ஒருவர், ‛‛பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்தீர்களா..."" என கேட்டார்.
இதனால் கோபமான அனுஷ்யா அந்த நபருக்கு, ‛‛அவரிடம் மட்டும் தான் பணம் உள்ளதா... ஏன் என்னிடம் இல்லையா... இப்படி சொன்னதற்காக உங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன். மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சளாகத்தான் தெரியும். பணம் மட்டுமே புத்தியாக கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தயவு செய்து மாறுங்கள்"" என காட்டமாக எச்சரித்து பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் கோபமான அனுஷ்யா அந்த நபருக்கு, ‛‛அவரிடம் மட்டும் தான் பணம் உள்ளதா... ஏன் என்னிடம் இல்லையா... இப்படி சொன்னதற்காக உங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன். மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சளாகத்தான் தெரியும். பணம் மட்டுமே புத்தியாக கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தயவு செய்து மாறுங்கள்"" என காட்டமாக எச்சரித்து பதிலடி கொடுத்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!