
அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா
ஆக 08, 2025
Advertisement
இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோரது கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. கடைசியாக வெளிவந்த "அகண்டா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகி வருகிறது. "14 ரீல்ஸ் ப்ளஸ்" நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கும் தமன் தான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது பாலகிருஷ்ணா அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என அறிவித்துள்ளனர். இந்தாண்டு வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இம்மாதத்திற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது பாலகிருஷ்ணா அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என அறிவித்துள்ளனர். இந்தாண்டு வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இம்மாதத்திற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!