
கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர்
தன் கடைசி படத்தில், ஆளும் கட்சியின் ஊழல் புள்ளிகளுக்கு எதிராக சில, "பஞ்ச் டயலாக்"குகளை வைத்திருந்த, தளபதி நடிகர், பின்னர் அதை நீக்க சொன்னார்; இப்போது மீண்டும் அந்த காட்சிகளை இணைக்குமாறு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த படம் திரைக்கு வந்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தினால், தன் அரசியல் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் கிடைக்கும் என, எதிர்பார்க்கும் தளபதி, இனிமேல் அரசியலில் பயந்தால் வேலைக்கு ஆகாது. அடித்து ஆட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால், தளபதி நடிகர் நடித்துள்ள இந்த கடைசி படம் திரைக்கு வரும்போது, அதில் இடம்பெற்றுள்ள ஆளும் கட்சிக்கு எதிரான காட்சிகள், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என, தெரியவந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!