
ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம்
உலகளவில் 250 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்த இந்த படம் யு டியூபில் வெளியிடப்படுவது குறித்து பலர் அதிர்ச்சி அடைந்தாலும், இது சினிமா வியாபாரத்தின் அடுத்த கட்டம் என்கிறார்கள். இந்த படத்தை பார்க்க தேவை இணைய இணைப்பு மட்டுமே. திரையரங்குகளில் தவறவிட்ட அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.
இது குறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறியிருப்பதாவது : கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன்.
இறுதியாக அதற்கு மிகச்சரியான நேரம் வந்துவிட்டது. மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெரும்பாலான சாதனங்களில் யு டியூப் இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும்.
சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக நான் பார்க்கிறேன் என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!