
ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்!
இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த வெரிய பில்டெக் நிறுவனத்தை நடத்தி வந்த ஏஜெண்டுகள் மீதும் மும்பை போலீசில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் மினி பார்ம் அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜ் என்ற ஏஜென்டிடம் இருந்து வாங்கியதாக தெரியவந்தது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவியான நடிகை ஷில்பா செட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் முடக்கி உள்ளது. அதோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் பரத்வாஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!