
விமான நிலைய மேம்பாலத்தில் இரண்டு மணி நேரம் சிறைப்பட்ட ராதிகா ஆப்தே
அதே சமயம் விமான நிலைய ஊழியர்கள் சிலர் விமான நடை மேம்பாலத்தில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட இன்னும் பல பயணிகளை அமரும்படி வற்புறுத்தி இரண்டு பக்க கதவுகளையும் அடைத்து விட்டனர். 8:30 மணிக்கு கிளம்ப வேண்டிய அவரது விமானம் 10:30 மணியாகியும் கிளம்புகின்ற அறிகுறியும் தெரியவில்லை. அதற்கு காரணங்களும் சொல்லப்படாமல் நடை மேம்பாலத்திலேயே கிட்டத்தட்ட சிறைபிடிக்க பட்டது போன்று ராதிகா ஆப்தேவும் இன்னும் சில பயணிகளும் அடைத்து வைக்கப்பட்டனர்.
விமான நிலைய ஊழியர்களும் அது குறித்த தெளிவான தகவலை தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா ஆப்தே நிச்சயம் இது வேடிக்கையான அனுபவம் தான் என்று விரக்தியுடன் கூறியுள்ளார். அதன் பிறகு நிலைமை சீராகி விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!