
எங்களுக்கு தலை தீபாவளி: சல்மான், கத்ரீனா பெருமிதம்
இதுகுறித்து சல்மான்கான் கூறியிருப்பதாவது: ஒரு தீபாவளி ரிலீஸை பெறுவது என்பது எனக்கு எப்போதுமே ஸ்பெஷலானது. காரணம் எப்போதுமே பண்டிகைகள் எனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுத்து ஆசீர்வதித்துள்ள பல நினைவுகள் என்னிடம் இருக்கின்றன. நானும் கத்ரீனாவும் இணைந்த நடித்த படங்கள் எதுவும் இதுவரை தீபாவளியில் வெளியானதில்லை என்பது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம் தான். அந்தவகையில் "டைகர் 3" எங்களது முதல் தீபாவளி ரிலீஸாக இருக்கும். சக நடிகர்களாக நாங்கள் இருவருமே அதிக மக்களால் விரும்பப்படும் படங்களில் நடித்துள்ளோம். அதனால் "டைகர் 3" மூலமாக அவர்களுக்கு சிறந்த தீபாவளியை கொடுக்க முடிந்தால் அதுவே எங்களுக்கு மிகுந்த பெருமையாக இருக்கும்” என்கிறார்.
கத்ரீனா கூறும்போது, “தீமைக்கு எதிராக பெறும் வெற்றியை குறித்து நான் நடித்துள்ள "டைகர் 3" ரிலீசாகிறது என்பதால் இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. மேலும் சல்மான் கானுடன் நான் இணைந்து நடித்து முதல்முறையாக தீபாவளியில் வெளியாகும் படமும் இதுதான். சல்மான் கானும் நானும் ஒவ்வொருவரையும் உற்சாக பொழுதுபோக்கு செய்வதற்காக காத்திருப்பதுடன் இந்த தீபாவளி பண்டிகையில் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் சேர்த்தே தர இருக்கிறோம்” என்கிறார்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள "டைகர் 3" ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக நாளை 12ம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!