
ரேவதி படத்திற்கு ராஜஸ்தான் அரசு வரிவிலக்கு
இந்த படத்தை அணிர்பன் போஸ் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப்படம் சமூக நோக்கத்துடன் உருவாகியுள்ளதாக கூறி இந்தப்படத்திற்கு தற்போது ராஜஸ்தான் அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சிலாதித்யா போரா கூறும்போது, “ராஜஸ்தான் அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளதன் மூலம் இந்த படம் இன்னும் நிறைய மக்களால் பார்க்கப்படும். அதன்மூலம் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இன்னும் அதிக மக்களிடம் ஏற்பட ஒரு வாய்ப்பை ராஜஸ்தான் அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் உறுப்புகள் தானம் கிடைக்காத நிலையில் மடியும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!