
ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க சொல்லும் பீட்டா நிறுவனம்
இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாண போட்டோ சூட் ஒன்று நடத்தி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் ரன்வீர். அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்ததோடு அவர் மீது மும்பை உள்ளிட்ட சில இடங்களில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதேசமயம் பாலிவுட் திரை உலகைச் சார்ந்த ஆலியாபட், ராக்கி சாவந்த் போன்ற பல நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தொடர்ந்து அவர் இதுபோன்று போட்டோ சூட் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இப்படியான நிலையில் தற்போது விலங்கு வதை தடுப்பதற்காக நடத்தப்பட்டு வரும் பீட்டாவும் தங்கள் அமைப்பின் விளம்பரத்திற்காக ரன்வீர் சிங்கை நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. ஏற்கனவே நிர்வாண போட்டோ சூட் நடத்தி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் ரன்வீர் சிங், பீட்டா அமைப்பின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வாரா? இல்லை மறுத்து விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!