
எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப்
படத்தை இயக்கியுள்ளதுடன் முதல் பாகத்தில் தான் நடித்த சையத் மசூத் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் இதிலும் தொடர்கிறார் பிரித்விராஜ். .அவரது தாயார் சுரையா பீபியாக நடித்திருக்கிறார் நயன் பட். இவர் மலையாளத்தில் முதன்முறையாக நடிக்கும் படம் இது. பல வருட அரசியல் அனுபவங்களை கொண்ட, வாழ்க்கையில் பல கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட பெண்ணாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
“அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் எனது வயதான தோற்றத்திற்காக தினசரி கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப் மட்டுமே செய்யப்பட்டது என்று கூறியுள்ளார் நயன் பட். எத்தனையோ இயக்குனர்களின் படங்களில் கடந்த 35 வருடங்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் ஒரு இயக்குனராகவும் சக நடிகராகவும் பிரித்விராஜ் ரொம்பவே தனித்தன்மை வாய்ந்தவராக எனக்கு தெரிந்தார்” என கூறியுள்ளார் நயன் பட்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!