
மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான்
அந்த பாடலுக்கு முதலில் மழைக்கா அரோராவுக்கு பதிலாக நடனமாட இருந்தது நடிகை ஷில்பா ஷிரோத்கர் தான். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியான நம்ரதா ஷிரோத்களின் சகோதரி தான். ஆனால் இந்த பாடலுக்காக ஷில்பா ஷிரோத்கரை ஒப்பந்தம் செய்ய சென்றபோது அவர் உடல் எடை கூடி காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான பரா கான் இந்தப் பாடலில் உன்னால் இந்த உருவத்துடன் எப்படி ஓடும் ரயிலில் நின்றபடி நடனம் ஆட முடியும். அப்படியே நீ நின்றாலும் அங்கே ஷாருக்கான் நிற்பதற்கு இடம் இருக்காதே என கிண்டலாக கூறியவர், இருந்தாலும் உனக்கு 15 நாட்கள் டைம் கொடுக்கிறேன் உடல் எடையை குறைத்தால் உன்னை இந்த பாடலில் நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் சொன்னபடி ஷில்பா ஷிரோத்கரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. அதன் பிறகு தான் மலைக்கா அரோராவை வைத்து அந்த பாடலை படமாக்கினார் பரா கான். இது குறித்த தகவலை சமீபத்திய வீடியோ ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பரா கான். ஆனாலும் ஒருவேளை இந்த சைய்ய சைய்யா பாடலின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நிச்சயமாக ஷில்பா ஷிரோத்கருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார் பரா கான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!