
சூதாட்ட ஆப் மோசடி : 3 பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்
அக் 07, 2023
Advertisement
துபாயை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. இந்த செயலியை விளம்பர படுத்துவதற்காக பாலிவுட் நடிகர், நடிகைகள் கோடி கணக்கில பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!