
கொரோனா விதிமுறைகளை மீறினாரா ஆலியாபட்
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தனிமைப்படுத்துதல் விதியை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, அவர் கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!