
அடுத்தடுத்த தோல்விகளால் தவிக்கும் அக்ஷய் குமார்
அக் 29, 2022
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், தொடர்ச்சியாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர். வித்தியாசமான கதைகளில் நடித்து விமர்சகர்களாலும் பாராட்டப்படுபவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது "ராம் சேது" படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது "ராம் சேது" படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!