
சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி : ஆகஸ்டில் ரிலீஸ் ஆகுமா மாத்ருபூமி ?
இந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சென்சார் போர்டு அனுமதி வழங்குவதில் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்பதால் இந்த தாமதம் நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் விதமாக திட்டமிடப்பட்டிருந்த படம் குறித்தபடி வெளியாகுமா என்கிற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!