
ஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி
ஜூன் 19, 2021
Advertisement
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பொருத்தவரை, இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என பெயர் பெற்றுள்ள அளவிற்கு, கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக, கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும், அதிக அளவில் நிதி உதவியும் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமல்ல தற்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாந்திப்பூரா மாவட்டத்திலுள்ள நீரு என்கிற பகுதிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்ற அக்ஷய் குமார் அந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார். அதுமட்டுமல்ல அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். அக்ஷய் குமாரின் இந்த செயல் ராணுவ வீரர்களையும் காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களையும் ஒருசேர மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார். அதுமட்டுமல்ல அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். அக்ஷய் குமாரின் இந்த செயல் ராணுவ வீரர்களையும் காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களையும் ஒருசேர மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!