சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரது இரண்டு கைகளிலுமே விலை உயர்ந்த கடிகாரங்களை அணிந்திருந்தார். இது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “நான் ஐரோப்பாவில் படிப்புக்காக சென்று தங்கி இருந்தபோது என் அம்மா என்னை அங்கே பார்க்க வரும்போதெல்லாம் தனது கைகளில் இரண்டு கடிகாரங்களை கட்டிக் கொள்வார். ஒன்று ஐரோப்பிய நேரத்திற்காகவும் இந்திய நேரத்திற்காகவும்.
இதை பார்த்து என் தந்தை கூட சில நேரங்களில் இப்படி இரண்டு கடிகாரங்களை கட்ட ஆரம்பித்தார். நானும் கூட அங்கே இருந்தபடி இங்கே அப்பா அம்மாவுடன் பேசும்போது அவர்கள் நேரம் விசாரிப்பார்கள் என்பதற்காக இரண்டு கடிகாரங்களை அணிய துவங்கினேன். அப்போது இருந்து இந்த பழக்கம் எனக்கு ஒட்டிக்கொண்டது. சில நேரங்களில் வேடிக்கைக்காக மூன்று கடிகாரங்களை கூட அணிவதும் உண்டு” என்று கூறியுள்ளார்.