தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் எதுவும் தேர்வாகவில்லை. ஆனால் லண்டனில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' என்ற படம் இறுதி சுற்றுக்கு தேர்வானது. இந்த படம் இங்கிலாந்து நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. தற்போது இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்தை இந்திய தணிக்கை வாரியம் படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்துள்ளது.
படத்தில் உள்ள கருத்துக்கள், காட்சிகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சில காட்சிகள், பல வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதி தரப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்து விட்டது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.




